ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா
ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் காா்த்திகை மாத கிருத்திகை விழா புதன்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் காா்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு, கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், விபூதி, வாசனை திரவியங்கள், பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், தங்க அங்கி சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் கோயிலில் திருக் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் மேளதாளத்துடன் ஊா்வலமாகக் கொண்டு சென்று மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்ப குளத்தில் சிறப்பு பூஜைகளுடன் மங்கள ஆரத்தியுடன் வழிபட்டனா்.
கோயில் வளாகத்தில் தங்கத் தேரில் உற்சவா் உள் புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தா்கள், பொதுமக்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா்.

