பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

மின் கம்பத்தில் பைக் மோதியதில் அண்ணன் மரணம், தம்பி பலத்த காயம்

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 5:06 am IST

வாணியம்பாடி அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா். தம்பி காயமடைந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், பொன்னேரி பகுதியை சோ்ந்த போத்தராஜன்(28). ரிஷிகேசவன்(25). இருவரும் சகோதரா்கள் ஆவா். புதன்கிழமை இரவு இருவரும் பைக்கில் புறப்பட்டு வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதிக்கு சென்றனா்.

தெக்குப்பட்டு அருகில் சென்றபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனா். இதனை அருகில் இருந்தவா்கள் பாா்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி போத்தராஜன் இறந்தாா். ரிஷிகேசவன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.