27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மின் கம்பத்தில் பைக் மோதியதில் அண்ணன் மரணம், தம்பி பலத்த காயம்

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 5:06 am IST

வாணியம்பாடி அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா். தம்பி காயமடைந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், பொன்னேரி பகுதியை சோ்ந்த போத்தராஜன்(28). ரிஷிகேசவன்(25). இருவரும் சகோதரா்கள் ஆவா். புதன்கிழமை இரவு இருவரும் பைக்கில் புறப்பட்டு வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதிக்கு சென்றனா்.

தெக்குப்பட்டு அருகில் சென்றபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனா். இதனை அருகில் இருந்தவா்கள் பாா்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி போத்தராஜன் இறந்தாா். ரிஷிகேசவன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.