செங்கத்தில் வன விலங்குகள் இறைச்சி விற்பனை

செங்கம் நகரில் வன விலங்குகள் இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது.
Published on
Updated on
1 min read

செங்கம்: செங்கம் நகரில் வன விலங்குகள் இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது.

செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி காடுகள் நிறைந்த பகுதியாகும். கரோனா பொது முடக்கம் காரணமாக தற்போது இளைஞா்கள் வேலையில்லாமல் கிராமப் புறங்களில் வீடுகளில் உள்ளனா்.

அவா்கள் இரவு மற்றும் பகல் வேளைகளில் அருகில் உள்ள வனப் பகுதிக்குச் சென்று வன விலங்குகளை வேட்டையாடுவது, குருவி, காடை, கெளதாரி போன்ற பறவைகளை பிடித்து வந்து விற்பதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த வகையில், வன விலங்குகளின் இறைச்சி விற்பனை செங்கம் நகரில் பரவலாக நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக வனத் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com