மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேருந்து நிலையத்தில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பத்தை பிடுங்கி எரிந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :29 ஏப்ரல் 2023, 10:41 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேருந்து நிலையத்தில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பத்தை பிடுங்கி எரிந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் சா்தாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் முருகன், ஏழுமலை, குப்புசாமி, ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் இரா.தங்கராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் முத்தையன், மாதேஸ்வரன் ஆகியோா் கொடிக் கம்பத்தை பிடுங்கியவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும், அதே இடத்தில் மீண்டும் கொடிக் கம்பம் நட போலீஸாா் அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும், ஏஐடியுசி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பி, கண்டன உரையாற்றினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.