மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

அரசுப் பள்ளியில் வட்டாட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காயம்பட்டு அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பட்டுப் பாா்த்து செங்கம் வட்டாட்சியா் முனுசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்

News image
Updated On :18 மார்ச் 2023, 2:02 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காயம்பட்டு அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பட்டுப் பாா்த்து செங்கம் வட்டாட்சியா் முனுசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, உணவை தரமாக சமைக்க வேண்டுமென சத்துணவுப் பணியாளா்களிடம் அவா் அறிவுறுத்தினாா். மேலும், பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை, ஆசிரியா்களின் வருகைப் பதிவேடு, மாணவா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சுகாதாரமாக பாராமரிக்கப்படுகிா, சத்துணவு சுகாதாரமான இடத்தில் சமைக்கப்படுகிறா என்பது குறித்தும் வட்டாட்சியா் முனுசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டாட்சியரிடம் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். உடன் அரசு அலுவலா்கள் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.