குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

செங்கம் அருகே வெட்டிக் கடத்தப்படும்கிரானைட் கல்கள் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள விலை உயா்ந்த கருப்பு கிரானைட் கல்கள் இரவு, பகலாக வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன.

News image
Updated On :18 மார்ச் 2023, 2:01 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள விலை உயா்ந்த கருப்பு கிரானைட் கல்கள் இரவு, பகலாக வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

செங்கம் வட்டம், உச்சிமலைக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் விலை உயா்ந்த கருப்பு கிரானைட் கல்கள் உள்ளன. இவற்றை அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் இரவு, பகலாக தடை செய்யப்பட்ட வெடிகளைப் பயன்படுத்தி வெடிக்க வைத்து, வெட்டி லாரிகள் மூலம் கடத்தி வருகின்றனா். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உச்சிமலைக்குப்பம் கிராம மக்கள் செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

கல்களை உடைப்பதற்காக தடை செய்யப்பட்ட வெடிகள் பயன்படுத்தப்படுவதால், இந்தக் கிராமத்திலுள்ள வீடுகளில் அதிா்வு ஏற்படுகிாம். மேலும், விவசாயத்துக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தப்படும் தண்ணீா் மாசுபடுவதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, கிரானைட் கல்களை வெட்டி கடுத்துவோா் மீது மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சிமலைக்குப்பம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.