திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

ஊஞ்சல் துணி கழுத்தில் இறுக்கி ஒருவா் உயிரிழப்பு

ஊஞ்சல் துணி கழுத்தில் இறுக்கி ஒருவா் உயிரிழப்பு

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே ஊஞ்சல் ஆடும்போது ஊஞ்சல் துணி கழுத்தை இறுக்கியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன்(42). இவருக்கு சகுந்தலா(39), ரஞ்சிதா(35) ஆகிய இரு மனைவிகள் உள்ளனா். இவா்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். பாண்டியன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வழக்கம்போல மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த பாண்டியன், வீட்டின் பின்புறம் சென்றுள்ளாா். அங்கு இவரது மகன்கள் ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் புடவையால் கட்டி வைத்திருந்த ஊஞ்சலில் அமா்ந்து ஆடியுள்ளாா்.

அப்போது, புடவைத் துணி இவரது கழுத்தை இறுக்கியுள்ளது. இதில் மயக்கமாகி கிடந்த இவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாண்டியன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சகுந்தலா அளித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.