தாட்கோ மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.9.38 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்
கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் 135 பயனாளிகளுக்கு ரூ.9.38 கோடி மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் 135 பயனாளிகளுக்கு ரூ.9.38 கோடி மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் தாட்கோ (இங-அதஐநஉ) திட்டத்தின்கீழ் கடந்த 2024-25- ஆம் ஆண்டு 79 பேருக்கு ரூ.5.46 கோடி மானியம், 2025-26 -ஆம் ஆண்டில் 56 பேருக்கு ரூ.3.93 கோடி மானியம் என மொத்தம் 9.38 கோடி மானியத்தில் 135 பயனாளிகளுக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...