கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தாட்கோ மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.9.38 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் 135 பயனாளிகளுக்கு ரூ.9.38 கோடி மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 1:17 am

Syndication

கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலமாக கடந்த 2 ஆண்டுகளில் 135 பயனாளிகளுக்கு ரூ.9.38 கோடி மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் தாட்கோ (இங-அதஐநஉ) திட்டத்தின்கீழ் கடந்த 2024-25- ஆம் ஆண்டு 79 பேருக்கு ரூ.5.46 கோடி மானியம், 2025-26 -ஆம் ஆண்டில் 56 பேருக்கு ரூ.3.93 கோடி மானியம் என மொத்தம் 9.38 கோடி மானியத்தில் 135 பயனாளிகளுக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.