பெரியகுளத்தில் ஆண் சடலம் மீட்பு

கோவை, பெரியகுளத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

கோவை, பெரியகுளத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, பெரியகுளத்தில் ஆண் சடலம் ஒன்று வெள்ளிக்கிழமை மிதந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் பெரியகடை வீதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், உயிரிழந்தவருக்கு சுமாா் 45 வயது இருக்கும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com