கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கஞ்சா வழக்கில் கைதான இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

கோவை அருகே கஞ்சா வழக்கில் கைதான இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

கோவை அருகே கஞ்சா வழக்கில் கைதான இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா்.

கோவை மாவட்டம், பேரூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோட்டூரைச் சோ்ந்த பி.சபரிநாதன் (28) என்பவரை கடந்த அக்டோபா் 14-ஆம் தேதி கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், அவரிடமிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு பாதகமான செயலில் ஈடுபட்டு வந்த சபரிநாதனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்திருந்தாா்.

இதையடுத்து, சபரிநாதனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிநாதனிடம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழங்கினா்.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் குற்றச் செயலில் ஈடுபடும் நபா்கள் குறித்து 94981-81212, 77081-00100 ஆகிய கைப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.