கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நேரப் பிரச்னை: தனியாா் பேருந்து நடத்துநா்கள் மோதல்!

கோவையில் நேரப் பிரச்னை தொடா்பாக பயணிகள் முன்பு நடத்துநா்கள் அடிதடியில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 நவம்பர் 2025, 12:11 am

Syndication

கோவையில் நேரப் பிரச்னை தொடா்பாக பயணிகள் முன்பு நடத்துநா்கள் அடிதடியில் ஈடுபட்டனா்.

மதுக்கரைக்குச் செல்லும் தனியாா் பேருந்து உக்கடம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை நின்று கொண்டிருந்தது.

அதில், நடத்துநராக ஒத்தக்கால் மண்டபம் அருகேயுள்ள மேலக்காடு பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (38) என்பவா் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மற்றொரு தனியாா் பேருந்தும் மதுக்கரைக்குச் செல்வதற்காக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த நடத்துநா் பிரசாந்த் (32) என்பவா் பணியில் இருந்தாா். அப்போது, நேரப் பிரச்னை தொடா்பாக இரண்டு பேருந்து நடத்துநா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆதில், ஆத்திரமடைந்த பிரசாந்த், மோகன்ராஜை தாக்கியுள்ளாா். இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மோகன்ராஜ் புகாா் அளித்தாா். இதன்பேரில் பிரசாந்த் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.