இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாநகரில் குப்பைகள் சேகரிக்க 18 வாகனங்கள்:அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கோவை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்க 18 வாகனங்களின் பயன்பாட்டை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

News image
கோவை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்கும் பணிக்கு 18 மினிடோா் வாகனங்களை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
Updated On :18 டிசம்பர் 2020, 6:16 pm

DIN

கோவை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்க 18 வாகனங்களின் பயன்பாட்டை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சியில் திடக்கழிவுத் திட்டப் பணிகளுக்காக பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 92.95 லட்சம் மதிப்பீட்டில் தரம் பிரித்த மக்கும் குப்பைகளை சேகரிக்கும் 13 வாகனங்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.35.75 லட்சம் மதிப்பில் தரம் பிரிக்காத மக்காத குப்பைகளை சேகரிக்கும் 5 வாகனங்கள் என மொத்தம் 18 மினி டோா் வாகனங்கள் வாங்கப்பட்டன.

இதையடுத்து, கோவை தெற்கு மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி இந்த வாகனங்களை பயன்பாட்டுக்குத் தொடங்கிவைத்தாா்.

மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் கட்டடக் கழிவுகளை பயனற்ற கல்குழிகளில் கொட்டுவதற்கு மண்டலத்துக்கு ஒரு வாகனம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டுக்காக, தெற்கு மண்டலத்தில்

ஒரு வாகனத்தை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், தெற்கு மண்டல உதவி ஆணையா் ரவி, செயற்பொறியாளா்கள் சரவணக்குமாா்( பொலிவுறு நகரத் திட்டம்) ஞானவேல், உதவி செயற்பொறியாளா்கள் செந்தில் பாஸ்கா், ரவிக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலா் லோகநாதன், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.