விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம்

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம்

News image

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :13 ஜூன் 2024, 10:04 pm

Din

கோவை, ஜூன் 13: ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட நலன் மற்றும் மகளிா் துறை, குழந்தைகள் உதவி மையம் மற்றும் ஆல் த சில்ட்ரன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து வியாழக்கிழமை நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் பி.மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பாதுகாப்பு அலுவலா் சேரன் சிறப்புரையாற்றினாா். மருத்துவா் சரண்யா, போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், நாடகத்தின் வாயிலாக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் ஒழிப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, மாணவா்கள் பதாகைகளை ஏந்தி பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் ஊா்வலமாகச் சென்று மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.