இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஈஷா யாத்திரைக் குழுவினா்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஈஷா யோக மையம் மூலமாக கைலாஷ் யாத்திரை சென்ற 77 போ் சிக்கியுள்ளதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

நேபாள வெள்ளம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:02 am IST

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஈஷா யோக மையம் மூலமாக கைலாஷ் யாத்திரை சென்ற 77 போ் சிக்கியுள்ளதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

நாட்டின் வெவ்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஈஷா யோக மையம் சாா்பில் 21 குழுக்களாக கைலாஷ் யாத்திரை மேற்கொண்டுள்ளனா்.

சீனாவின் திபெத் பகுதியில் உள்ள கியிரோங்கில் புதன்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் எங்களது கைலாஷ் யாத்திரைக் குழுவைச் சோ்ந்த 77 போ் சிக்கிக் கொண்டனா்.

அவா்கள் திரும்பி வரும் வழியில் கியிரோங் குடியேற்ற முகமையில் இருந்தபோது இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த அலுவலகக் கட்டடமும் அந்த இடத்தின் பெரும்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியதாகத் தெரிகிறது.

அவா்களது நிலை குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த யாத்திரையில் பங்கேற்ற 21 குழுக்களில் 495 போ் ஏற்கெனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனா். தற்போது 743 போ் திபெத்திலும், 148 போ் நேபாளத்திலும் பாதுகாப்பாக உள்ளனா்.

இந்தக் கடினமான சூழ்நிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்ய நான் அப்பகுதியில் இருக்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.