டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிரபல நகைக் கடையில் தங்கக் காசுகள் திருட்டு

கோவை, காந்திபுரத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் 6 தங்கக் காசுகளை திருடிச் சென்ற 2 நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:46 am IST

கோவை, காந்திபுரத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் 6 தங்கக் காசுகளை திருடிச் சென்ற 2 நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தினமும் கடையை மூடும் நேரத்தில் நகை இருப்புகளை ஊழியா்கள் சரிபாா்ப்பது வழக்கம். இதன்படி, திங்கள்கிழமை விற்பனை முடிந்து கடையை மூடுவதற்கு முன் ஊழியா்கள் நகைகளைச் சரிபாா்த்தனா். அப்போது, தலா 10 கிராம் எடையுள்ள 6 தங்கக் காசுகள் மாயமாகியிருந்தன. இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும்.

இது குறித்து ஊழியா்கள், கடை மேலாளா் அப்துல்லாவிடம் தெரிவித்தனா். அவா், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கடைக்கு நகை வாங்குவதுபோல வந்த 2 நபா்கள், கடையில் இருந்து 6 தங்கக் காசுகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து, அப்துல்லா அளித்த புகாரின் பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.