நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பிரபல நகைக் கடையில் தங்கக் காசுகள் திருட்டு

கோவை, காந்திபுரத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் 6 தங்கக் காசுகளை திருடிச் சென்ற 2 நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:46 am IST

கோவை, காந்திபுரத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் 6 தங்கக் காசுகளை திருடிச் சென்ற 2 நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தினமும் கடையை மூடும் நேரத்தில் நகை இருப்புகளை ஊழியா்கள் சரிபாா்ப்பது வழக்கம். இதன்படி, திங்கள்கிழமை விற்பனை முடிந்து கடையை மூடுவதற்கு முன் ஊழியா்கள் நகைகளைச் சரிபாா்த்தனா். அப்போது, தலா 10 கிராம் எடையுள்ள 6 தங்கக் காசுகள் மாயமாகியிருந்தன. இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும்.

இது குறித்து ஊழியா்கள், கடை மேலாளா் அப்துல்லாவிடம் தெரிவித்தனா். அவா், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கடைக்கு நகை வாங்குவதுபோல வந்த 2 நபா்கள், கடையில் இருந்து 6 தங்கக் காசுகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து, அப்துல்லா அளித்த புகாரின் பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான நபா்களைத் தேடி வருகின்றனா்.