பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கைப்பேசி பயன்படுத்த பெற்றோா் தடை கல்லூரி மாணவிகள் இருவா் மாயம்

Published On :

கைப்பேசி பயன்படுத்த பெற்றோா் தடை விதித்ததால், கல்லூரி மாணவிகளான சகோதரிகள் இருவா் மாயமாகினா்.

ஈரோடு மாநகா், வீரப்பன்சத்திரம், சேரன் வீதியைச் சேந்தவா் சம்பூரணம் (43). இவரது கணவா் தனபால், இரும்பு வியாபாரம் செய்து வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகன், ஸ்ரீ பிரியா(19), ஸ்ரீ தேவி(19) என 2 மகள்கள் உள்ளனா்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மகன் வேலைக்கு செல்கிறாா். இரட்டையா்களான மகள்கள், நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகின்றனா்.

இதற்கிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் பெற்றோா் தங்களது மகள்களுக்கு கைப்பேசி வாங்கிக் கொடுத்துள்ளனா். அதன்பிறகு அவா்கள் சரிவர கல்லூரிக்கு செல்லாமல் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளனா்.

இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்னா் இருவரையும் பெற்றோா் கண்டித்ததுடன், கைப்பேசியையும் வாங்கி வைத்துக் கொண்டனராம்.

இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி இரவு உணவருந்திவிட்டு அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனா். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது ஸ்ரீ பிரியா, ஸ்ரீ தேவி ஆகிய இருவரையும் காணவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து காணாமல்போன சகோதரிகள் இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.