கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கல்லூரி பேராசிரியா் வீட்டில் 7 பவுன் திருட்டு

பெருந்துறையில் தனியாா் கல்லூரி பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடுபோயுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 8:52 pm

Syndication

பெருந்துறையில் தனியாா் கல்லூரி பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடுபோயுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த தோப்புபாளையம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி சாா்பில் கல்லூரியில் பணிபுரியும் பணியாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

இதில், அந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியம் நவநீதகிருஷ்ணன் (35) குடும்பத்துடன் வசித்து வருகிறாா். நவநீதகிருஷ்ணனின் மனைவி பிரசவத்துக்காக கடந்த 26-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வீட்டைப் பூட்டிவிட்டு, மனைவியுடன் நவநீதகிருஷ்ணன் இருந்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனா். தடயவியல் நிபுணா்களும் வந்து கைரேகைகளையும், போலீஸாரின் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.