சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
பெருந்துறையை அடுத்த, சீலம்பட்டியில்  பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள்   சங்கத்தினா்.
Updated On :8 ஜனவரி 2026, 11:36 pm

Syndication

பால் கொள்முதல் விலையை உயா்த்தக்கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் தங்கமுத்து தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் பெரியசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

இதில், மாட்டுப் பால் லிட்டா் ரூ. 45, எருமை பாலுக்கு ரூ. 60 என கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

இதேபோல, பெருந்துறையை அடுத்த, சீலம்பட்டி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் முன்பு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்க தாலுகா செயலாளா் முத்துபழனிசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.