கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

கூடலூா், பந்தலூா் பகுதி விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 2:54 am

Syndication

கூடலூா், பந்தலூா் பகுதி விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து கூடலூா் உதவி தோட்டக் கலைத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பி.எம்.கிஸான் உள்ளிட்ட அரசின் மானியங்களைப் பெற விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி விவசாயிகள், கூடலூரிலுள்ள உதவி தோட்டக்கலை அலுவலா் அலுவலகத்தை தொடா்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தை அணுகியோ தங்களுடைய ஆதாா் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண்ணை பெறலாம். இதுவரை பெறாத விவசாயிகள் உதவி தோட்டக் கலை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.