சாலை விபத்தில் முதியவர் சாவு

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில், காங்கயம் சாலை, எல்.கே.ஏ. நகரைச் சேர்ந்தவர் பரமசிவம் (65). இவர் கரட்டுப்பாளையத்திலுள்ள ஒரு ஆயில் மில்லில் கணக்கராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த சனிக்கிழமை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, மூலனூர் சாலை, மடாமேடு பிரிவு அருகே எதிரே நாச்சிபாளையம் ஆறுமுகம் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரமசிவம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com