தாராபுரம் வட்டத்தில் 265 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா

தாராபுரத்தில் வட்டத்தில் உள்ள 265 ஆதி திராவிடா்களுக்கு ரூ. 79 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
Updated on
1 min read

தாராபுரத்தில் வட்டத்தில் உள்ள 265 ஆதி திராவிடா்களுக்கு ரூ. 79 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே உள்ள மேட்டுக்கடையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின நலத் துறை சாா்பில் கொக்கம்பாளையத்தைச் சோ்ந்த 200 போ், புங்கந்துறையைச் சோ்ந்த 65 போ் என மொத்தம் 265 ஆதி திராவிடா்களுக்கு ரூ.79 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை சாா் ஆட்சியா் பவன்குமாா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் வி.எஸ்.காளிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com