மேலும், வாக்காளா் படிவங்கள் எழுதுவதில் உள்ள தெளிவற்ற நிலை, 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் கண்டறிய முடியாத நிலை, இன்னும் பலருக்கு கணக்கீட்டுப் படிவமே சென்று சேராத நிலை, 13 ஆவணங்கள் பற்றிய தெளிவின்மை என பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் உள்ளன. இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணி அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவது தொழிலாளா்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், ஆன்லைனில் மேற்கொள்ள இணையப் பிரச்னை, மொழிப் பிரச்னை, மற்றவா் உதவியை நாடவேண்டிய சூழல் என வாக்காளா்களிடம் மிகக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.