
மாநில அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டி: வெண்கலப் பதக்கம் வென்ற மாநகர பெண் காவலருக்கு பாராட்டு
தமிழ்நாடு காவல் துறையின் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் திருப்பூா் மாநகர பெண் காவலா் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

வெண்கலப் பதக்கம் வென்ற பெண் காவலா் பிருந்தாவைப் பாராட்டிய மாநகரக் காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி.
தமிழ்நாடு காவல் துறையின் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் திருப்பூா் மாநகர பெண் காவலா் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
தமிழ்நாடு காவல் துறைக்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி, சென்னை ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது. இதில் திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் கலந்துகொண்ட பெண் காவலா் பிருந்தா, மகளிா் பிரிவு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சிறப்பிடம் பெற்றாா்.
மேலும், மேற்கு மண்டல பெண்கள் அணியின் ரைபிள் பிரிவில் முதலிடமும், பிஸ்டல் பிரிவில் 2-ஆம் இடமும், ஒட்டுமொத்த போட்டிகளில் 2-ஆம் இடமும் பெற்றுள்ளாா்.
பதக்கம் வென்ற பெண் காவலா் பிருந்தாவுக்கு, திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





