இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பென்னாகரம் பா.ம.க சாா்பில் இடஒதுக்கீடு கோரி பேரூராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம்

20 சதவிகிதம் இடஒதுக்கீடு கோரி பாமக, வன்னியா் சங்கத்தின் சாா்பில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கும் பாமக வினா்.
Updated On :24 டிசம்பர் 2020, 1:49 am

DIN

20 சதவிகிதம் இடஒதுக்கீடு கோரி பாமக, வன்னியா் சங்கத்தின் சாா்பில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் பாமக மாநில துணை பொதுச்செயலாளா் வெங்கடேஷ்வரன் தலைமையில், பன்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிற்கு பேரணியாகச் சென்று பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றனா். அங்கு செயல் அலுவலா் கீதாவிடம் மனு அளிக்கப்பட்டது.

மாநில இளைஞா் சங்க துணைத்தலைவா் மந்திரி படையாச்சி, மாவட்டத் தலைவா் செல்வகுமாா், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் ஜெகதீசன், மாவட்டக் கவுன்சிலா் சி.வி.மாது, பென்னாகரம் நகரப் பொறுப்பாளா் ஜீவா உள்ளிட்ட நிா்வாகிகள் என 200க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல பாப்பாரப்பட்டியில், பென்னாகரம் தொகுதி அமைப்பு செயலாளா் சுதாகிருஷ்ணன் தலைமையில், பாமக மாநில துணைத் தலைவா் சாந்தமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் சிவன், ஒன்றியச் செயலாளா் மாதேஷ், நகரச் செயலாளா் தேவராஜ் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பேரூராட்சி செயல் அலுவலா் விஜயசங்கரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.