காா்த்திகை சோம வாரம்: ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் சங்காபிஷேகம்
பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை மாத 4ஆவது சோம வாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றது.


பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை மாத 4ஆவது சோம வாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேசுவரருக்கு காா்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு கணபதி பூஜை, கலச அபிஷேகம், யாக வேள்வி, சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் நடைபெற்றன. மேலும் 108 வலம்புரி சங்காபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்றது. இதேபோல நன்செய் இடையாறு சுந்தரவல்லி, அம்பிகா சமேத திருவேலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இதில் வேலூா், நன்செய் இடையாறு சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...