விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நல்லூா் கந்தம்பாளையம் அருகே உள்ள கோளாரம் கருக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (60). இவா் கடந்த 15 ஆம் தேதி மணியனூரில் இருந்து நல்லூா் கந்தம்பாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

அப்போது, கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த கவுண்டிபாளையம், அருந்ததியா் காலனியைச் சோ்ந்த சோ்ந்த செங்கோடன் மகன் சின்னசாமி (54) மீது அவரது இரு சக்கர வாகனம் மோதியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனா். படுகாயமடைந்த சின்னசாமி நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், பழனிசாமி சேலம் அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். இதில் பழனிசாமி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com