சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு: கிராமங்களில் மருத்துவ முகாம்கள்

கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

Updated On :12 நவம்பர் 2024, 1:30 am IST

நாமக்கல்: கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மோகனூா் கால்நடை மருந்தகத்திற்கு உள்பட்ட ராசிபாளையம் கிராமத்தில் 7 மாடுகள் அண்மையில் திடீரென இறந்த காரணத்தினால், ராசிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, குமரிப்பாளையம் ஊராட்சிக்கு செவ்வாய்க்கிழமை (நவ.12) ஒருவந்தூா் கால்நடை மருந்தகத்திலும், புதன்கிழமை பனைமரத்துப்பட்டி ஊராட்சிக்கு, மோகனூரிலும், வியாழக்கிழமை சீத்தப்பட்டி ஊராட்சிக்கு, மோகனூரிலும், வெள்ளிக்கிழமை சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்கு, ஒருவந்தூரிலும், சனிக்கிழமை (நவ.16) மாமரத்துப்பட்டி ஊராட்சிக்கு, ஒருவந்தூரிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளன.

அதேபோல, திருச்செங்கோடு ஒன்றியம், தோக்கவாடியில் எல்.எஸ்.டி. நோய் அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவ சிகிச்சை முகாம், தடுப்பூசி செலுத்தும் பணி கிராமங்களில் நடைபெற உள்ளது

அதன்படி, செவ்வாய்க்கிழமை (நவ.12) பழையபாளையம் ஊராட்சிக்கு, தோக்கவாடி கால்நடை மருந்தகத்திலும், புதன்கிழமை தச்சன்காட்டுபாளையம் ஊராட்சிக்கு, தோக்கவாடி, வியாழக்கிழமை செரமிட்டாம்பாளையம் ஊராட்சிக்கு ஆனங்கூரிலும், வெள்ளிக்கிழமை முப்பாட்டம்பாளையம் ஊராட்சிக்கு, ஆனங்கூரிலும், சனிக்கிழமை (நவ.16) கீழேரிப்பட்டி ஊராட்சிக்கு, ஆனங்கூா் கால்நடை மருந்தகத்திலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.

இதில் கால்நடை வளா்ப்போா், பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி சிகிச்சை மேற்கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.