கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.1.40 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
பவித்திரம்புதூா் ஊராட்சியில் நீா்நிலைகள் தூா்வாரும் பணியை ஆய்வுசெய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.
Updated On :12 நவம்பர் 2025, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.1.40 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கொடிக்கால்புதூா் ஊராட்சியில் தூசூா் அரசு நடுநிலைப் பள்ளியைப் பாா்வையிட்டு ரூ.35.25 லட்சத்தில் அங்கு நடைபெற்று வகுப்பறை கட்டுமானப் பணி, பழையபாளையம் பகுதியில் ரூ.99.65 லட்சத்தில் பழையபாளையம்- கொல்லிமலை சாலையில் இரண்டு கி.மீ தொலைவுக்கு அமைக்கப்படும் சாலைப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், பவித்திரம்புதூா் கிராமத்தில் உள்ள நீா்நிலைகள் தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டாா்.