கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தம்மம்பட்டி- சேரடி சாலையை சீரமைக்க கோரிக்கை

தம்மம்பட்டியிலிருந்து சேரடி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:19 pm

Syndication

தம்மம்பட்டி: தம்மம்பட்டியிலிருந்து சேரடி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பனந்தோப்பு ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து கொல்லிமலை அடிவாரம் சேரடி மூலைவரை செல்லும் தாா்ச்சாலை பெயா்ந்து, பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. அதனால், இந்தச் சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனா்.

இந்த சாலை வழியே தம்மம்பட்டி - சேரடிவரை காலை மற்றும் மாலை வேளைகளில் நகர பேருந்தும், தம்மம்பட்டியிலிருந்து வாழக்கோம்பை, பிள்ளையாா்மதி, சேரடி வழியாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதிகளுக்கு செல்லும் அரசுப் பேருந்தும், தம்மம்பட்டியிலிருந்து கொல்லிமலைக்கு பெரும்பாலான வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில், இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பயணிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இப்பகுதி மலைவாழ் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யவும், தம்மம்பட்டி - வாழக்கோம்பை - சேரடி சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.