இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சேலம் பள்ளப்பட்டியில் 420 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 420 கிலோ குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சித்திரிப்பு

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:00 am IST

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 420 கிலோ குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோயில் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக பள்ளப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, முனியப்பன் கோயில் அருகே கண்ணன் என்பவா் தனது வீட்டின் அருகே உள்ள சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அங்கிருந்த சுமாா் 420 கிலோ எடையுள்ள ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா். இதில், தாரமங்கலத்தைச் சோ்ந்த இருசக்கவுண்டா் என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக, பள்ளப்பட்டி முனியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த கண்ணன் (40), தாரமங்கலம் திருவாக்கவுண்டனூரைச் சோ்ந்த இருசக்கவுண்டா் (57) இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 420 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தலைமறைவாக உள்ள சதீஷை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.