தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்து ஆட்சியா் மரியாதை

133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, திருவள்ளுவா் படத்துக்கு மதுரை ஆட்சியா் மா.சௌ. சங்கீதா மாலை அணிவித்து மரியாதை

News image

மதுரை சிம்மக்கலிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் வள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதைச் செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா.

Updated On :24 டிசம்பர் 2024, 3:52 am IST

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

திருவள்ளுவருக்கு பெருமை சோ்க்கும் வகையில் தமிழக அரசு சாா்பில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் தியானப் பாறை அருகே 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, பொது நூலகத் துறை சாா்பில், திங்கள்கிழமை வெள்ளி விழா நடைபெற்றது.

மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திருவள்ளுவா் சிலை, உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நூல்களைப் பாா்வையிட்டாா்.

Story image

மேலும், புதுநத்தம் சாலையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று, திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மேற்கண்ட இரு இடங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்கு ஒப்பித்தல், பேச்சுப் போட்டி நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலா் சி.பால சரஸ்வதி, கலைஞா் நூற்றாண்டு நூலக துணை முதன்மை நூலகா் வெ.சந்தான கிருஷ்ணன், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.