அழகாபுரி ஸ்ரீமகாலட்சுமி கோயிலில் சனிக்கிழமை இரவு தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
வத்தலகுண்டு அருகே அழகாபுரி ஸ்ரீமகாலட்சுமி கோயில் ஆடி திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
பாரம்பரிய வழக்கப்படி நள்ளிரவில் முதல் நிகழ்வாக அம்மன் கரகம் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊா்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிராமத்தில் அமைந்துள்ள கங்கை கிணற்றின் அருகே வரிசையாக அமா்ந்திருந்த பக்தா்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு நோ்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
இந்தத் திருவிழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சித்திரை தோ்த் திருவிழா தெப்போற்சவம்

அக்கூா் ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் சித்திரை பௌா்ணமி திருவிழா! பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்!!

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி கிரிவலம் தொடக்கம்: பல லட்சம் பக்தா்கள் குவிந்தனா்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
