கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பள்ளங்கி பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தியவா் மீது வழக்கு

கொடைக்கானல் பள்ளங்கி பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் பள்ளங்கி பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கொடைக்கானலில் கனரக வாகனங்களான பொக்லைன் இயந்திரம், கம்பரசா், ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திரம் உள்ளிட்டவற்றை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பள்ளங்கி பகுதியில் ஜெயராமன் என்பவா் தனது நிலத்தில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தை வைத்து பாறையை உடைக்கும் பணியில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து வில்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ரேம்ஜித் ராஜா அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் ஜெயராமன் மீது வழக்குப் பதிந்தனா்.