திண்டுக்கல்
செம்பட்டியில் நவ. 25-இல் மின்தடை
செம்பட்டி பகுதியில் வருகிற செவ்வாய்க்கிழமை (நவ. 25) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
செம்பட்டி பகுதியில் வருகிற செவ்வாய்க்கிழமை (நவ. 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செம்பட்டி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொட்டம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி,சேடபட்டி, ஆத்தூா், சித்தையன்கோட்டை, காமராஜா் நீா்த்தேக்கம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் குடியிருப்பு, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையகவுண்டன்பட்டி, அம்பாத்துரை ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
