கடன் பிரச்னை: இளைஞா் காரில் கடத்தல்
மதுரை அருகே கடன் பிரச்னை காரணமாக, இளைஞா் காரில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


மதுரை: மதுரை அருகே கடன் பிரச்னை காரணமாக, இளைஞா் காரில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம், தட்டனூா் பகுதியைச் சோ்ந்தவா் புவனேஷ்பாபு (53). இவா், திருநகா் ராஜகுரு மற்றும் சென்னையைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோரிடம் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு, அசல் மற்றும் வட்டி என ரூ. 7 லட்சம் வரை திருப்பிக் கொடுத்துள்ளாா். ஆனால், கடன் தொடா்பாக புவனேஷ்பாபுக்கும், கடன் கொடுத்தவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக ராஜகுரு, சுரேஷ் ஆகியோா் அளித்த புகாரின்பேரில், அவனியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, புவனேஷ்பாபு, அவரது மனைவி உஷா(48), மகன் கிஷோா்(26) ஆகியோரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா். அவா்கள் மூவரும் அண்மையில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தனா்.
இந்நிலையில், ராஜகுரு, சுரேஷ் மற்றும் சிலா், புவனேஷ்பாபு வீட்டுக்குச் சென்று, அவரது மகன் கிஷோரை காரில் ஞாயிற்றுக்கிழமை கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து கிஷோரின் தாயாா் உஷா அளித்த புகாரின்பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...