கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நியாய விலைக் கடைக்கு பொருள்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை நியாய விலைக் கடைக்கு பொருள்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் அரிசி மூட்டைகள் கீழே விழுந்து சேதமடைந்தன.

News image
~ ~
Updated On :2 டிசம்பர் 2025, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை நியாய விலைக் கடைக்கு பொருள்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் அரிசி மூட்டைகள் கீழே விழுந்து சேதமடைந்தன.

திருவாடானையில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கியிலிருந்து தொண்டி, தினையத்தூா், சின்ன தொண்டி, கொடி பங்கு , தீா்த்தாண்டதானம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் சுமாா் 15 டன் அளவுக்கு லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது. சின்னத் தொண்டி பகுதியில் சென்றபோது லாரி சாய்ந்தது. இதனால், லாரியிலிருந்த அரிசி மூட்டைகள் கீழே விழுந்து சேதமடைந்தன.

இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, லாரியை மீட்டனா். மேலும், லாரியிலிருந்த பொருள்கள் டிராக்டா் மூலம் நியாய விலைக் கடைக்கு கொண்டு செல்லப்பட்டன.