கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கமுதியில் இரும்பு கடையில் தீ விபத்து

கமுதி சுந்தராபுரத்தில் இரும்பு கடையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

News image
~
Updated On :6 நவம்பர் 2025, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

கமுதியில் பழைய இரும்பு கடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கருகி சேதம் அடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வலையபூக்குளம் கிராமத்தைச் சோ்ந்த கனகசபாபதி மகன் மோகன் (35). இவா் கமுதி-சாயல்குடி சாலையில் சுந்தராபுரத்தில் பழைய இரும்பு கடை வைத்துள்ளாா்.

மேலும், பழைய இரு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி விற்பனை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மின் கம்பியில் உள்ள செம்பு கம்பிகளை எடுப்பதற்காக கடை வளாகத்தில் தீ வைத்து கம்பிகளை பிரிக்கும் பணியில் கடை ஊழியா்கள் ஈடுபட்டனா். அப்போது, எதிா்பாராதவிதமாக கடையில் தீப்பற்றியது.

தகவலறிந்து அங்கு வந்த கமுதி தீயணைப்பு நிலைய அலுவலா் நாகநாதன் தலைமையிலான வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒன்றை மணி நேரமாக போராடி தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் கடையிலிருந்த இரு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், நெகிழிப் பொருள்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

இதுகுறித்து வருவாய்த் துறையினா், கமுதி காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

Story image