முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தடையை மீறி சுருளி அருவிக்கு வந்தால் நடவடிக்கை:  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு தடையை மீறி வருபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
தடையை மீறி சுருளி அருவிக்கு வந்தால் நடவடிக்கை:  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Updated On :11 ஆகஸ்ட் 2021, 12:14 pm

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு தடையை மீறி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக சுருளி அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் தர்ப்பணம், நேர்த்திக்கடன் கடன், சாமி தரிசனம் மற்றும் விழாக்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

ஆனால் தடையை மீறி சுருளி அருவிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரனுக்கு புகார்கள் வந்தன.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுருளி அருவிக்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும்,  முகக் கவசம் அணியாமலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நடமாடியதை கண்டறிந்தார்.

இதுகுறித்து கம்பம் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவும், முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாவட்ட ஆர்சியர் உத்தரவிட்டார். எனினும் ஆடி அமாவாசை உள்ளிட்ட நாள்களில் தடையை மீறி கூட்டம் வந்தது.

இதன்காரணமாக சுருளி அருவி மற்றும் வளாக பகுதிகளில் பொதுமக்கள் வருவதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், தடையை மீறி வருபவர்கள் மீது காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பேரில் சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்கும் விதமாக சுருளிப்பட்டி ஊராட்சி பணியாளர்கள், ராயப்பன்பட்டி காவல்துறயினர் சார்பில் சுருளி அருவி சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சுருளி அருவிக்கு வருபவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.