இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: பக்தர்கள் குளிக்கத் தடை

சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 8:25 am

DIN

கம்பம்: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் செவ்வாய்க்கிழமை பக்தர்கள், சுற்றுலாப்  பயணிகள் குளிக்க புலிகள் காப்பகத்தினர் தடை விதித்தனர்.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி, கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அருவியில் திங்கள்கிழமை மாலை மற்றும் செவ்வாய்க்கிழமை காலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதைக் கண்காணித்த புலிகள் காப்பக ஊழியர்கள் அருவியில் குளிக்க பக்தர்கள், சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுபற்றி ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய ஊழியர் ஒருவர் கூறியது,

அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் பக்தர்கள் குளிக்க செவ்வாய்க்கிழமை தடை விதிக்கபட்டுள்ளது. அருவியில் ஏற்படும் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம். தொடர் மழை பெய்தால் தடை நீட்டிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.