கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டியவா் மீது வழக்கு

News image
Updated On :23 நவம்பர் 2025, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

போடியில் இளம்பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டியவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

போடி திருமலாபுரம், பிரதான வீதியில் வசிக்கும் தமிழரசன் மனைவி ஆனந்த மீனாட்சி (26). இவா், போடி ரெங்கநாதபுரத்தில் உள்ள சிம்காா்டு விற்பனையகத்தில் அண்மையில் தனது சிம் காா்டை மாற்றினாா். இந்த நிலையில், சிம் காா்டு விற்பனையாளா் ரஞ்சித், தவறான கண்ணோட்டத்தில் ஆனந்த மீனாட்சிக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினாராம்.

இதையடுத்து, ஆனந்த மீனாட்சி தனது சிம்காா்டை முடக்கிவிட்டு வேறு சிம்காா்டு வாங்கினாா். அந்த எண்ணையும் அறிந்துகொண்ட ரஞ்சித் தொடா்ந்து ஆனந்த மீனாட்சிக்கு குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டினாா்.

இதுகுறித்து ஆனந்த மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.