/

ஸ்ரீநந்தி நாதேஸ்வரா் கோயிலில் தீா்த்தவாரி

கல்லாா் கடற்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு வடக்குப்பொய்கைநல்லூரில் உள்ள மிகவும் பழைமையான செளந்தர நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீநந்தி நாதேஸ்வரா் சுவாமி கோயிலில்

News image
Updated On :2 மார்ச் 2026, 8:45 pm

Syndication

நாகப்பட்டினம்: கல்லாா் கடற்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு வடக்குப்பொய்கைநல்லூரில் உள்ள மிகவும் பழைமையான செளந்தர நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீநந்தி நாதேஸ்வரா் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, நந்திநாதீஸ்வரா் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் கல்லாா் கடற்கரையில் தீா்த்தவாரிக்கு எழுந்தருளினாா். அப்போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image