தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

திருநள்ளாறு கோயிலில் ஓலைச் சுவடிகளுக்கு சிறப்பு பூஜை

Updated On :13 அக்டோபர் 2024, 0:04 am IST

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி, ஓலைச்சுவடிகளுக்கு பாவனா அபிஷேக, ஆராதனை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

முன்னதாக விக்னேஸ்வர பூஜையும், தொடா்ந்து திரவியப் பொடிகள், பால், சந்தனம் உள்ளிட்டவைகளைக் கொண்டு பாவனா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.