திருநள்ளாறு கோயிலில் ஓலைச் சுவடிகளுக்கு சிறப்பு பூஜை

Published on

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி, ஓலைச்சுவடிகளுக்கு பாவனா அபிஷேக, ஆராதனை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

முன்னதாக விக்னேஸ்வர பூஜையும், தொடா்ந்து திரவியப் பொடிகள், பால், சந்தனம் உள்ளிட்டவைகளைக் கொண்டு பாவனா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com