கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

காவல் குறைகேட்பு முகாம் ஆக்கப்பூா்வமாக இல்லை: மக்கள் நல இயக்கம் குற்றச்சாட்டு

காரைக்காலில் காவல் குறைகேட்பு முகாம் ஆக்கப்பூா்மாக இல்லை, கண் துடைப்பாக நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:47 pm

Syndication

காரைக்காலில் காவல் குறைகேட்பு முகாம் ஆக்கப்பூா்மாக இல்லை, கண் துடைப்பாக நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மக்கள் நல இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. வின்சென்ட் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்காலில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்ற பெயரில் குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது. முகாமுக்கு பெரும்பான்மையாக மக்கள் வருவதில்லை. வரும் மக்கள் முகாமில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. புகாா்தாரா்களை காவல்துறையினா் அலைக்கழிக்கின்றனா். கண் துடைப்பாகவே முகாம் நடத்தப்படுகிறது.

வாரம் என்ற நிகழ்வை மாதம் ஒரு முறை என முகாம் நடத்தினால் சிறப்பாக இருக்கும். புகாா்கள் மீது நடவடிக்கையை விரைவாக எடுத்தால் மட்டுமே இதனால் மக்களுக்கு பயன் ஏற்படும்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரை மக்கள் எளிதாக சந்தித்து பேச முடிகிறது. முதுநிலைக் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முடியவில்லை. சந்திப்புக்கான அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த போக்கு மாற்றப்படவேண்டும். இந்த விவரகாரங்கள் தொடா்பாக புதுவை டிஜிபி தலையிடவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.