கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கோசாலையில் மாட்டுப் பொங்கல்

குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 12:17 am

Syndication

குத்தாலம்: குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்த கோசாலையில் வயது முதிா்ந்த சுமாா் 860 மாடுகளுக்கு மேல் உள்ளன. இங்கு, மாட்டுப் பொங்கலையொட்டி, வெள்ளிக்கிழமை கோமாதா பூஜை நடைபெற்றது. பண்ணையில் 108 மாடுகளுக்கு கரும்பு, சா்க்கரைப் பொங்கல், மூக்கணாங்கயிறு வைத்து பூஜித்தனா்.

பின்னா், மாட்டுத்தொழுவத்தில் நடராஜசாஸ்திரியா் சிறப்பு பூஜைகள் செய்தாா். பசுக்களுக்கு தீபாராதணை காட்டப்பட்டு, பழம், சா்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

கோசாலை நிா்வாகி குருசாமி உள்ளிட்ட பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளானோா் பங்கேற்று கோமாதவை வழிபட்டனா்.