கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

குத்தாலம் அருகே பெண் உடலை அடக்கம் செய்வதில் தகராறு: போலீஸார் சமரசம்

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே பெண்ணின்  உடலை அடக்கம் செய்வதில் தகராறு ஏற்பட்டதையொட்டி,  போலீஸாரின் சமரசத்தால் புதன்கிழமை  மாலை அடக்கம் செய்யப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:13 am

DIN

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே பெண்ணின்  உடலை அடக்கம் செய்வதில் தகராறு ஏற்பட்டதையொட்டி,  போலீஸாரின் சமரசத்தால் புதன்கிழமை  மாலை அடக்கம் செய்யப்பட்டது.
தேரழந்தூர் பெருமாள் வடக்கு வீதியைச் சேர்ந்த முஹம்மது நூர்தீன் மனைவி ஹைருன்னிஷா (65), செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது மகன் ஜின்னா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரிவில் இருப்பதால், தன் தாய் உடலை தானே தொழுகை செய்து பள்ளிவாசல் பகுதியில் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இறந்தவர் உடலை இஸ்லாமியர் வழக்கப்படி பள்ளிவாசலுக்கு  கொண்டு வந்து, அங்கு தொழுகை செய்த பிறகுதான் அனுப்புவோம் என்று உள்ளூர் ஜமாஅத்தார்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
தகவலின்பேரில், விரைந்து வந்த மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளர் கலிதீர்த்தான், வட்டாட்சியர் திருமாறன், காவல் ஆய்வாளர்கள் சுகுணா, ஆனந்த தாண்டவம் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் இறந்தவர்  உடலுக்கு முதலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொழுகை நடத்திய பின்னர், உள்ளூர் ஜமாஅத் தொழுகை நடத்த பள்ளிவாசலில்  ஒப்படைக்க வேண்டும். பின்னர், தொழுகைக்கு பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து, அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புதன்கிழமை மாலை ஹைருன்னிஷா வீட்டு அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொழுகை நடத்தி ஊர்வலமாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர், உள்ளூர் ஜமாத்தினர் உடலுக்கு தொழுகை நடத்துவதற்குள் மயானத்தின் பின்புற வழியாக தூக்கிச் சென்றனர். பின்னர், அங்குள்ள கேட்டை உடைத்து அடக்கம் செய்ய முயன்றனர்.
அப்போது உள்ளூர் ஜமாஅத்தினரும் பள்ளிவாசல் வழியாக மயானத்தின் உள்ளே சென்று அவர்களை தடுக்க
முயன்றனர்.
போலீஸாரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மீண்டும் உள்ளூர் ஜமாஅத்தினர் தொழுகை நடத்த பள்ளிவாசலில் உடல்   ஒப்படைக்கப்பட்டது. தொழுகை நடத்தியப்பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.