கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 8 குடும்பங்களுக்கு உதவி

சீர்காழியில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஈசானியத் தெருவில் உள்ள 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:17 am

DIN

சீர்காழியில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஈசானியத் தெருவில் உள்ள 8 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ.80 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கி  ஆறுதல் கூறினார் கல்வி நிறுவனங்களின் தலைவர்  கே.வி.இராதாகிருஷ்ணன்.
 சீர்காழி அருகே ஈசானிய தெருவில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில்  8 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 8 வீடுகளில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன்,  குட் சமாரிட்டன் கல்வி நிறுவன இயக்குநர் பிரவீன்வசந்த்ஜபேஷ் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் 80 ஆயிரம் ரொக்கப் பணமும், 10 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரணப்பொருள்கள் வழங்கி ஆறுதல் கூறினர்.  பள்ளி முதல்வர் ஜோஷ்வாபிரபாகரசிங்,  பட்டதாரி ஆசிரியர் கோவி.நடராஜன்,  முன்னாள் கவுன்சிலர் சேகர்,  நாடார்  சங்க பிரமுகர்கள் பாலமுருகன், குருசாமி மற்றும்  முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.