வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்தக் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
வேதாரண்யம் அடுத்த வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை தொடங்கிய மழை, மாலை சுமார் 6 மணிக்கு கருப்பம்புலம், நகரப் பகுதியில் கன மழையாக கொட்டியது.
சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த மழை, வேதாரண்யத்தில் 65.4 மி.மீ, கேயாயக்கரையில் 19 மி.மீ, தலைஞாயிறு 13,2 மி.மீட்டராக பதிவானது.