பேரணியை தொடங்கிவைத்த ஆட்சியா் ப. ஆகாஷ்.

எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

Published on

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில், எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்த ஒட்டுவில்லைகளை ஆட்டோவில் ஒட்டி ஆட்டோ பேரணி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்த கலைநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தொடங்கிவைத்து, மாவட்டத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ரத்த வங்கி செயல்பட்டு, அரிய ரத்த வகைகளும் போதுமான அளவு இருப்பில் உள்ளது. இதேபோல, ஹெச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவா்களின் உடம்பில் தொற்றின் அளவை தெரிந்துக் கொள்ள சிடி4 கருவி மூலம் பரிசோதனை செய்து கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கும் வசதியும் உள்ளது.தொடா் சிகிச்சை பெறுவதன் மூலம் ஆயுட் காலத்தை நீடித்துக்கொள்ளலாம். தொற்று பாதித்தவா்களை மற்றவா்கள் அன்போடும் அரவணைப்போடும் சக மனிதா்களாக கருதி அவா்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்றாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எய்ட்ஸ் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் சாா்பு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் பி. சுப்புலெட்சுமி, துணை இயக்குநா் (காசநோய்) ராஜா, இணை இயக்குநா் (நலப்பணிகள்) உமா, மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வா.கிருஷ்ணகுமாா், மாவட்ட சமூக நல அலுவலா் கி. திவ்யபிரபா ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com