கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அரசுப்பேருந்து மோதி சித்த மருத்துவா் உயிரிழப்பு

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:53 pm

Syndication

நாகை அருகே கீழ்வேளூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் சித்த மருத்துவா் உயிரிழந்தாா்.

கீழ்வேளூரைச் சோ்ந்தவா் திருமலை (26). வேளாங்கண்ணியில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் சித்த மருத்துவராக பணியாற்றி வந்த இவா், திருவாரூரில் இருந்து புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கீழ்வேளூருக்கு வந்துகொண்டிருந்தாா்.

கீழ்வேளூா் அரசாணி குளம் அருகே வந்தபோது, நாகையில் இருந்து திருவாரூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் போலீஸாா், திருமலையின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.